டி 20 அரங்கில் எவரும் எட்டாத சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர்…, சூர்யகுமாரையே மிஞ்சிட்டாரே!!

0
டி 20 அரங்கில் எவரும் எட்டாத சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர்..., சூர்யகுமாரையே மிஞ்சிட்டாரே!!
டி 20 அரங்கில் எவரும் எட்டாத சாதனையை பதிவு செய்த பாகிஸ்தான் வீரர்..., சூர்யகுமாரையே மிஞ்சிட்டாரே!!

இதுவரை டி 20 அரங்கில் எந்த வீரரும் அடையாத சாதனையை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் படைத்துள்ளார்.

டி20 டக் அவுட்:

சர்வதேச பாகிஸ்தான் அணியானது, கடந்த இரு மாதங்களாக, உள்ளூர் தொடரில் விளையாடி வந்தது. இந்த உள்ளூர் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. இந்த போட்டிகள் மூலம், பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் இதுவரை டி 20 அரங்கில் யாரும் படைத்திராத மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஒரே மையத்தை சேர்ந்த 700 பேர் எப்படி தேர்ச்சி பெற முடியும்?? TNPSC தேர்வாணையம் கொடுத்த விளக்கம்!!!

அதாவது, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், அப்துல்லா ஷபீக் டக் அவுட்டாகி உள்ளார். மேலும், இவர் இதற்கு முன் கடந்த 2020 ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டக் அவுட்டான பிறகு தற்போது தான், பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றார். மீண்டும் டக் அவுட்டானதால், சர்வதேச டி 20 அரங்கில் தொடர்ச்சியாக 4 டக் அவுட்டுகளை வாங்கிய முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தகாரராகி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், சூர்யகுமார் யாதவ் 3 டக் அவுட்களை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here