நடிகை ஐஸ்வர்யாவும் அவர்களது எட்டு வயது மகளும் சிகிச்சைக்குப் பிறகு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக ஐஸ்வர்யா ராய் பச்சனின் கணவர் அபிஷேக் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் கொரோனா பாதிப்பு:
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் 10 நாட்கள் தங்கி கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி. என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது வீட்டிலேயே இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவர்கள் கவனிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்” என அபிஷேக் பச்சன் ட்வீட் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஒரு வாரம் பச்சன் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் ஜூலை 17 அன்று மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே ஜூலை 11 அன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.