மத்திய அரசு அவ்வப்போது கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வரும். தற்போது அந்த வகையில் மேலும் ஓர் புதிய வழிமுறையை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இதில் இருந்து முழுவதுமாக மீள்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உயிரிழப்பின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள மத்திய அரசு பல வழிமுறைகளை அறிவித்து வருகிறது. தற்போது அந்த வகையில் புதிய வழிமுறை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி காற்றோட்ட வசதி நம்மை கொரோனாவில் இருந்து காக்கும் என்று தெரிவித்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த மனசு தாங்க கடவுள் – தனது தொழிலாளிகளுக்காக அல்லு அர்ஜுன் செய்த செயலை பாருங்க!!
காற்றோட்டம் அதிகமாக இருந்தால் கொரோனா பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பிறருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளது. எனவே கொரோனாவில் இருந்து நம்மை மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கிருமி நாசினி இதனை தொடர்ந்து காற்று வசதியும் காக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.