தெலுங்கு சினிமாவின் முன்ணனி நடிகரான அல்லு அர்ஜுன் சில தினங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். இந்நிலையில் இவர் தற்போது தனது தொழிலாளிகளுக்காக செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அல்லு அர்ஜுன்:
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சினிமா துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல நடிகர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால் இவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பின்பு சிகிச்சையின் முடிவில் இவர் தொற்றில் இருந்து முழுவதுமாக தற்போது மீண்டுள்ளார். தற்போது நாட்டில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நாட்டில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிலருக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் வர ரீச் ஆகிட்டேங்களே பாண்டியன் ஸ்டோர்ஸ் – வேற லெவல் போங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இதனை முன்னிட்டு அல்லு அர்ஜுன் தன்னிடம் பணி புரிபவர்களின் நலன் கருதி ஓர் அருமையான செயல் ஒன்றை செய்துள்ளார். அதன்படி அவர் தன்னிடம் பணி புரியும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.