பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல் சிங்கப்பூர் வரை ரீச் உள்ளது. அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இரவு நேரத்தில் குடும்பங்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக தொலைக்காட்சி முன்பு அமர வைத்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் நிலவும் பிரச்னை, பாசம் போன்றவற்றை மிக அருமையாக வெளிப்படுத்தி வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த அளவிற்கு இந்த சீரியல் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்த இரு முக்கிய பிரபலங்கள் தற்போது உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு சற்று வேதனையளித்து வருகிறது. அவர்களது இழப்பு தற்போது வரை ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சிங்கப்பூர் வரை பேமஸாகி உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
உங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கா??வீட்டிலே பரிசோதனை செய்துகொள்ளலாம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவர்களது குடும்பத்தார் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் பெயரில் மளிகை கடை வைத்துள்ளனர். அந்த கடை அந்த பகுதியில் பேமஸான கடை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சிங்கப்பூரில் ஓர் பழக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையும் அங்கு செம பேமஸாம். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது.