நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பிரபல நடிகை மீது FIR பதிவு செய்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வர்ஷா பிரியதர்ஷினி:
ஒடிசா,பெங்காலி போன்ற மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. தற்போது அடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும் ஓடிடி யில் ரிலீசாகும் படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் வர்ஷா பிரியதர்ஷினி தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது கல்யாணி நாயக் என்பவர் நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் ஆயிஷா சேர்ந்து 30000 ரூபாய் வாங்கி தன்னை ஏமாற்றியதாக புவனேஸ்வரில் உள்ள சஹீத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வகையில் அவர்கள் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து வர்ஷா பிரியதர்ஷினி பேசியதாவது, என் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஆதாரம் இல்லாதது.
IPL லில் இந்திய வீரருக்கும் மட்டுமே அனுமதி…, பிசிசிஐயின் அதிரடி முடிவு?? வெளியான தகவல்!!
என்னுடைய பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த மாதிரி ஒரு பொய்யான வழக்கை கொடுத்திருக்கிறார். அவர் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மேலும் 2020ம் ஆண்டு முதல் என்னை அசிங்கப்படுத்த பல குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றனர். இதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். மேலும் பொய் புகார் அளித்த நபருக்கு தக்க தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.