விஜய் தொலைக்காட்சி பிரபலமான ஒருவர் தனது சொந்த ஊரில் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பேசப்பட்டு வருகிறது.
ராம்போ ராமர்:
சின்னத்திரையில் காமெடியனாக நுழைந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வருபவர் தான் நடிகர் ராம்போ ராமர். பொதுவாக காமெடியன்கள் தங்களது திறமைகளை ஏதேனும் நிகழ்ச்சியின் மூலம் வெளிக்காட்டி மக்கள் மத்தியில் ரீச் ஆவார்கள். அப்படி பிரபலமானவர்களில் ராம்போ ராமரும் ஒருவர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இவரை தூக்கிவிட்ட நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது ஷோ தான். அதில் முக்கியமாக ஒரு ஷோவில் சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை என்ற எபிசோடு மூலம் என்னமா ராமர் என்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அரசு அதிகாரியாகவும் திகழ்ந்து வருகிறார்.
IPL லில் இந்திய வீரருக்கும் மட்டுமே அனுமதி…, பிசிசிஐயின் அதிரடி முடிவு?? வெளியான தகவல்!!
இந்நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகே பெரிய வீட்டைக் கட்டியுள்ளார். புதுமனை புகுவிழாவில் விஜய் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விசேஷத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக வித்தியாசமாக இருக்கும் காமெடி பேனர்களை வீட்டு வாசலில் வைத்து அட்ராசிட்டி செய்துள்ளார். மேலும் வந்த விருந்தினர்களுக்கு மதுரை ஸ்பெஷல் நல்லி எலும்பு கறியை படையலாக போட்டு அசத்தியுள்ளார் ராம்போ ராமர்.