விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் சர்ச்சை நாயகியாக பிரபலமானவர் தான் வனிதா. தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என தனது கெரியரில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது தன்னுடைய அம்மாவுக்கு 3 முறை மஞ்சள் காமாலை நோய் பாதித்துள்ளது. இருந்தாலும் கூட அவர் தன்னுடைய குடியை நிறுத்தவில்லை என கூறியுள்ளார். மேலும் தனக்கும் தன் பெற்றோருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாததால் நான் அவர்களை விட்டு விலகி இருந்தேன்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனாலும் என்னுடைய அம்மா இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் என்னை வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். மேலும் ராம்ஜெத்மலானி என்ற மூத்த வழக்கறிஞரை அழைத்து சொத்தில் என்னுடைய பெயரை சேர்க்கும் படி கூறினார். இதுபோக நான் சில ரகசியங்களை கூற வேண்டும், என்னை வீடியோ எடு என கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் என் அப்பாவிடம் வனிதாவை விட்டுடாதீங்க என சொல்லி விட்டு தான் இறந்தார் என்று தன் தாயை குறித்து பேசி கண் கலங்கியுள்ளார்.