நாதஸ்வரம், வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா சீசன் 1 போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் ஸ்ருதி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரவிந்த் சேகர் என்பவரை மணமுடித்துக் கொண்டார். இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் உயிரிழந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் அவரது மனைவி ஸ்ருதி கண்கலங்க வைக்கும் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,” பிரிந்தது உடல் மட்டும் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது. நீங்கள் நிம்மதியாக இருங்கள், உங்கள் மீதான எனது அன்பு இன்னும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram