மீளாத துயரத்தில் இருந்து மீண்டு வந்த சமந்தா.., திடுதிப்புனு பாதை யாத்திரையில் களமிறங்கி பழனி முருகன் தரிசனம்!!

0
மீளாத துயரத்தில் இருந்து மீண்டு வந்த சமந்தா.., திடுதிப்புனு பாதை யாத்திரையில் களமிறங்கி பழனி முருகன் தரிசனம்!!
மீளாத துயரத்தில் இருந்து மீண்டு வந்த சமந்தா.., திடுதிப்புனு பாதை யாத்திரையில் களமிறங்கி பழனி முருகன் தரிசனம்!!

தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் சமந்தா ரூத் பிரபு. இவர் தமிழ் திரையில் ”பாணா காத்தாடி” திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ”நான் ஈ” என்ற திரைப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது போக இந்திய சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களில் முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வந்தார். இந்நிலையில் தெலுங்கு திரையில் உள்ள முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த வருடங்களில் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து இவர் சிறிது காலங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடும் சிகிச்சை பெற்று வந்தார்.

“டாடா” படத்தின் வெற்றியை அவங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.., பிரிவை நினைத்து கண்கலங்கிய கவின்!!!

மேலும் இவருக்காக இவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தான் குணமடைந்து வருவதாகவும் உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி என்று ரசிகர்களுக்கு தன்னுடைய தற்போதைய நிலையை பற்றி வெளிப்படுத்தி இருந்தார். இந்த நேரத்தில் மீண்டும் இவர் தனது உடல் நலம் குணமடைந்து வருவதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக மலையில் பாதயாத்திரை செய்துள்ளார். மேலும் இந்த மலையின் கீழ் இருந்து மேல் வரை 600 படிகளில் சூடம் ஏற்றி முருகனை தரிசித்து வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here