நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார்.
நடிகை சமந்தா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த வரலாற்று காவியமான சாகுந்தலம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது அவர் பேசியதாவது, நான் இப்படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முகத்தில் தேஜஸ் மற்றும் கம்பீரம் இருக்க வேண்டும். ஆனால் அது என்னிடம் இல்லை என்று பயந்தேன். அதனால் தான் மறுத்தேன். இருப்பினும் இயக்குனர் என்னை விடாமல் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். அதன் பின்னர் தான் படத்தில் நடித்தேன், படமும் அற்புதமாக வந்துள்ளது.
ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ”good நியூஸ்” கொடுத்த ஆலியா மானசா.., வாழ்த்தும் ரசிகர்கள்!!
மேலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்கு பயம் வந்தால், அதில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பாடுபடுவேன். அதில் பயம் காணாமல் போகிவிடும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பயத்தால் தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஒரு பெண்ணாகவும், நடிகைகையாகவும் என்னுடைய முன்னேற்றத்திற்கு பயம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.