நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட்டர் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்வீட்டர் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை பதிவிட்டு சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் அவர் குறிப்பிட்டிருந்தாவது, ஆரம்பத்தில் நான் தோல்வி அடைந்தேன் என்றால் அதற்கு நான் காரணம், ஆனால் தற்போது தோல்வி அடைகிறேன் என்றால் அதற்கு நான் மட்டும் காரணம் இல்லை என்று பதிவிட்டிருந்தார். சொல்ல போனால் அவர் இப்போது நடந்திருக்கும் துரோகத்தை குறித்து பேசியுள்ளார், ஆனால் அவர் மனைவியை குறித்து பேசுகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் அந்த ட்வீட்டை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
அது மட்டும் இல்லைனா.., நான் இந்த அளவுக்கு வந்துருக்க மாட்டேன்.., சமந்தா ஓபன் டாக்!!
அதுமட்டுமின்றி அவர் இரண்டாவது மனைவியும் விவாகரத்து செய்ய போகிறார் என்றும் தகவலை பரப்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அந்த ட்வீட்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, நான் இதற்கு முன்னர் போட்ட ட்வீட்டை தவறாக புரிந்து கொண்டீர்கள். அதில் நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சொல்லவில்லை. என்னோட professional லைப் பற்றி தான் சொன்னேன் என்று கூறியுள்ளார்.
Hey all
My tweeet few days back has been terribly misinterpreted..
It was on proffessional front n not personal at all..
The biggest gift that we give someone is TRUST
And when we fail we always blame ourselves..
We shudn be hard on ourselves
THATS ALL I MEANT
ALL IS WELL— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) March 26, 2023