‘நடிகைகள் சம்பளம் அதிகமாக கேட்டால் பிரச்சனையில் தான் முடியும்’ – சமந்தா ஓபன் டாக்!!

0
இருந்தாலும் இவ்வளவு பேராசை கூடாது மா.. ஒரே Condition-ஆல் சினிமா உலகை மிரள வைத்த சமந்தா!
இருந்தாலும் இவ்வளவு பேராசை கூடாது மா.. ஒரே Condition-ஆல் சினிமா உலகை மிரள வைத்த சமந்தா!

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நடிகைகள் சம்பளம் அதிகமாக கேட்டால் அது பிரச்சனையாகிறது என சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமந்தா வருத்தம்

திரையுலகில் இருக்கும் பிரபலங்களுக்கு சம்பளம் என்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. திரைப்படங்களில் நடிக்கும் ஒவ்வொரு கதாநாயகனுக்கும், நாயகிக்கும் கொடுக்கப்படும் சம்பளத்தில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் காணப்படுகிறது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை சம்பள பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் நடிக்கும் ஒரு படத்துக்கு மட்டும் விஜய்க்கு 60 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அந்த வரிசையில் இரண்டாவதாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு 55 கோடியும், அஜித்துக்கு 45 கோடியும், சூர்யாவுக்கு 25 கோடியும், தனுஷுக்கு 14 கோடியும், விக்ரமுக்கு 10 கோடியும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

கொரோனா நிவாரண தொகையாக மக்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – அதிபர் ஜோ பைடன் அதிரடி!!

நடிகைகளில் முதலிடத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு 4 கோடியும், நடிகை அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோருக்கு 3 கோடியும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், திரையுலகில் நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என நடிகை சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமந்தா கூறும்போது, ‘நடிகைகளுக்கு சம்பளம் எப்போதும் குறைவாக கொடுக்கப்படுகிறது. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் நடிகைகளின் சம்பளத்தை நடிகர்களுடன் ஒப்பிடும் போது, முதல் இருபது இடங்களில் இருக்கும் நடிகர்களின் சம்பளத்தை விட குறைவாகவே உள்ளது. நடிகைகள் சம்பளம் அதிகமாக கேட்டால் பிரச்னையாக்குகின்றனர். இதுவே நடிகர்கள் கேட்டால் அதற்கு உடன்படுகிறார்கள்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here