கொரோனா நிவாரண தொகையாக விரைவில் அமெரிக்க மக்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா:
கொரோனா வைரஸ் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாடு என்றால் அது அமெரிக்கா தான். அந்த பகுதியில் தான் நாள் ஒன்று ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரை இழந்து வந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது வேலைகளையும் இழந்து வந்தனர். மேலும் அமெரிக்காவின் பொருளாதாரமும் அபார வீழ்ச்சியை அடைந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டேடுக்கவும், மக்களின் வாழ்வு சிறப்பாக அமைவதற்கும் அமெரிக்க அரசு ஓர் முடிவு எடுத்து. பொருளாதாரத்தை சரிசெய்வதற்கு ரூ.138 கோடி மதிப்பில் செலவிடுவதாக அமெரிக்க முடிவு செய்தது. ஆனால் இந்த திட்டம் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று இதனை அதிபர் ஜோ பைடன் மசோதாவை சட்டமாகும் கோப்புகளில் கையெழுத்திடுகிறார். இதனால் சுமார் 85% குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அதிபர் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!!
மேலும் கொரோனா தடுப்பூசி வாங்கும் பணிகளும் மிக சிறப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தார். கொரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தலா 1,400 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும் என்றும் அதிபர் தெரிவித்தார். தற்போது இந்த தகவலினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.