தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியிலும் நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.
வேட்புமனு தாக்கல்
இந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை துவங்கி இம்மாதம் 19ம் வரை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்காக நாளை காலை 11 மணி முதல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தாக்கல் செய்த மனுக்கான பரிசீலனை 20ம் தேதி முதல் துவங்கும். மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மனு தாக்கல் செய்வதற்கு இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் பேரணி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.