இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா:

சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது. இதனால் பலர் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனவிற்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 22,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,12,85,561 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 126 பேர் உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழப்பு 1,58,189 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 18,100 பேர் குணமடைந்துள்ளனர்.

மமதா பானர்ஜியை கொலை வெறியுடன் தாக்கிய மர்ம நபர்கள் – மருத்துவமனையில் அனுமதி!!

இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து மொத்தம் 1,09,38,146 பேர் ஆக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் கொரோனவிற்காக 1,89,226 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குணமடைந்தவர்களின் விகிதம் 96.92% ஆகவும், உயிர் இழந்தவர்களின் விகிதம் 1.40% ஆகவும் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here