விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலை வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியாவின் கணவர் கோபி ராதிகாவை 2வது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் தன் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இதனால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி அடுத்தடுத்து ஏகப்பட்ட டிவிஸ்டுகளுடன் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில் இருந்து கோபி விலக போகிறார் என்ற தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து இதில் கோபியாக நடிக்கும் சதீஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ காட்சியும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
அஜித்துடன் ஜோடி சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி.., அப்பவே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா?
இந்த நிலையில் தற்போது இவரை தொடர்ந்து ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவும் விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரேஷ்மா கூறியதாவது, கோபி இதில் இருந்து விலக போகிறாரா என்று எனக்கு தெரியாது, மேலும் ”அடுத்த எபிசோடில் நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை இதில் கோபி மாறினால் என்னையும் மாற்றி விடுவார்கள்” என கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.