தமிழ் சினிமாவில் வம்சம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் அருள்நிதி. இப்படம் தான் இவருக்கு முதல் படமாக இருந்தாலும் இவரது அசத்தலான நடிப்பால் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து தகராறு, டிமாண்டி காலணி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் ‘திருவின் குரல்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நடித்துள்ளார். மேலும் இப்படம் இந்த மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நேரத்தில் இப்படத்திற்கான நேர்காணல் பேட்டி ஒன்றை இவர் கொடுத்துள்ளார்.
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., நாளை 71,000 பேருக்கு பணி நியமனம்!!!
அதில் பேட்டியாளர் இவரிடம் ”பாரதிராஜா சாருக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என கேள்விப்பட்டோம். இது உங்களுக்கு எப்படியானா மகிழ்ச்சியை கொடுக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு அருள்நிதி கூறியதாவது ” அவர் என்னிடம் நீ நல்ல நடிகரை தாண்டி ஒரு நல்ல மனிதன் என கூறினார்”. இப்படி ஒரு நல்ல பெயரை அதுவும் உங்களை மாதிரியான மனிதர்களின் வார்த்தைகளாக கேட்க எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் இந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள எனக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு வந்திருக்கு என்று கூறினேன்” என பேசியுள்ளார்.