மத்திய அரசின் கல்வித்துறை, ரயில்வேத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்திலும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதன்படி ஒவ்வொரு நிலையாக 70,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்க “ரோஜ்கார்” என்ற திட்டத்தையும் அமல்படுத்தினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இத்திட்டத்தின் படி கடந்த அக்டோபர் மாதம் 75,000 பேருக்கு மத்திய அரசு துறைகளில் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை ஏப்ரல் 13) 71,000 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை தேர்வர்களுக்கு வழங்க உள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்.., கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்!!
இந்த தேர்வர்களுக்கு ரூல்ஸ் and ரெகுலேஷன், HR பாலிசி உள்ளிட்டவைகளை “கர்மயோகி பிராரம்ப” என்கிற ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.