மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரா” என்ற திரைப்படம் ஓ.டி.டி தலத்தில் வெளியாக உள்ளதாக அந்த படத்தின் குழு கூறி உள்ளது.
“தில் பெச்சாரா” படம்:
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரையுலகம் மட்டும் இன்றி ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இவர் நடிப்பில் கடைசியாக நடித்த படம் “தில் பெச்சாரா” என்ற பாலிவுட் படம் ஆகும். இந்த படத்தில் சைப் அலி கான், சுஷாந்த் மற்றும் சஞ்சனா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.இந்த படத்தை மே 8 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர், ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் தள்ளி போனது.
படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது. முகேஷ் இயக்கி உள்ளார்.
கூடுதல் சிறப்பு:
A story of love, hope, and endless memories.
Celebrating the late #SushantSinghRajput's legacy that will be etched in the minds of all and cherished forever. #DilBechara coming to everyone on July 24. pic.twitter.com/3gPJZvBRun— Disney+HotstarPremium (@DisneyplusHSP) June 25, 2020
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சுஷாந்த்க்கு உள்ள திரைத்துறை காதல் மற்றும் அவருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக ஹாட்ஸ்டார் இந்த படத்தை இலவசமாக தர உள்ளது. இது சந்தா செலுத்துபவர்கள் மற்றும் செலுத்தாதவர்களும் அடக்கம். இந்த படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.