டெல்லி மாநிலத்தில் இனிமேல் சீனா நாட்டை சேர்ந்தவர்களுக்கு தாங்கும் விடுதி அறைகள் வழங்கப்பட மாட்டாது என ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய – சீனா இடையேயான சண்டை..!
இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன வீரர்கள் 35 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டனம்..!
இதனையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஊடகவாதிகள், சமூக ஆர்வலர்கள் அரசின் மீது கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியதன் எதிரொலியாக இனிமேல் டெல்லியில் சீன நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் வழங்கப்பட மாட்டாது என டெல்லி ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது