கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்.., அடுத்த கனா இதுதான்!!

0
கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்.., அடுத்த கனா இதுதான்!!
கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்.., அடுத்த கனா இதுதான்!!

மாவீரன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது கேரியரில் புது அவதாரம் எடுக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்:

திரையுலகில் தளபதி விஜய்க்கு அடுத்து குழந்தைகள் மற்றும் பெண்களை அதிகம் ஈர்த்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வந்த இவர் தனது திறமையால் மட்டுமே இப்போது முன்னணி நடிகராக ஜொலிக்கிறார். தற்போது ரஜினி,கமல், விஜய், அஜித் ஆகியோர் படங்கள் வெளியே வந்தால் எப்படி எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவிற்கு சிவா படமும் இருந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவா நடிக்கும் மாவீரன் படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன் தற்போது புது அவதாரம் ஒன்றை எடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட்டில் கலக்கி வரும் நடராஜன் என்பவரின் வாழ்க்கை பயணத்தை படமாக எடுக்க போவதாகவும் அதில் சிவகார்த்திகேயேனே நடித்து இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டோவில் இருக்கும் பாகுபலி பிரபலம் யார் தெரியுமா? முடிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்!!

கிரிக்கெட் வீரர் நடராஜ் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்தார். பின்பு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். அங்கு நடந்த ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பேற்பட்ட வீரரின் பயோபிக் கதையை சிவா கையில் எடுத்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here