சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலி ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளார். மே மாதம் முதல் அடுத்த 4 மூன்று மாதங்களுக்கு அதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
வண்டலூர் பூங்கா:
சென்னை வண்டலூர் பூங்கா இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிகளவில் விலங்கு வகைகளை கொண்டுள்ள பூங்காவாக திகழ்கிறது. இப்பூங்காவில் விலங்குகளை பார்ப்பது மட்டுமின்றி அவற்றுடன் சிறப்பான பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் ‘விலங்கு தத்தெடுப்பு திட்டம்’ செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பிற்கு தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நேற்று அனு எனும் வெள்ளைப்புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்து உள்ளார். மே 2020 முதல் அடுத்த 4 மாதங்களுக்கு தத்தெடுத்து உள்ளார். இந்த புலியை ஏற்கனவே 2018ம் ஆண்டு இவர் தத்தெடுத்து உள்ளார். பூங்காவில் ஏற்கனவே 14 வெள்ளைப்புலிகள் உள்ள நிலையில் அனு என பெயரிடப்பட்ட இந்த புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |