கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அது குறித்து எவ்வித பாரபட்சமும் இன்றி, சுதந்திர விசாரணையை நடத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா விசாரணை:
உலகளவில் கொரோனா தாக்கத்தால் 48 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள உயிரி ஆயுத ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனா இந்த வைரஸ் குறித்த தகவல்களை ஆரம்பத்தில் மறைத்ததாக பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றனர்.
எனவே கொரோனா வைரஸ் தோன்றியது மற்றும் பரவியது குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு இந்திய உட்பட 116 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. 194 நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஒப்புக்கொண்டது. உலகில் கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தான் விசாரணை நடத்த வேண்டும் என சீன அதிபர் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரெயேசஸ் பாரபட்சமின்றி, சுதந்திர விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |