எச்சில் வேண்டாம், வியர்வை ஓகே – புதிய விதிமுறைகளை பரிந்துரைத்த ஐசிசி…!

0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் தற்காலிகமாக புதிய விதிமுறைகளை ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் தலைவர் அனில் கும்ப்ளே இந்த விதிகளை வெளியிட்டு உள்ளார்.

புதிய விதிமுறைகள்:

ஐசிசி கிரிக்கெட் பரிந்துரைக்குழு தலைவர் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், ஷான் பொல்லாக் ஆகியோர் இணைய வழி ஆலோசனையில் ஈடுபட்டு இந்த விதிகளை ஐசிசி க்கு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக மே 28ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரிந்துரைக்கப்பட்டு உள்ள விதிகளின் விபரங்கள்,

  • கொரோனா வைரஸ் எச்சில் மூலம் சுலபமாக பரவும் என்பதால் அதனை பயன்படுத்தி பந்தினை பளபளப்பாக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • வெளிநாட்டு நடுவர்கள் 2002ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பதில் சிக்கல்கள் நீடிப்பதால் இந்த பிரச்சனைகள் முடியும் வரை உள்ளூர் நடுவர்களை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் பயன்படுத்தலாம்.
  • இந்த முடிவு காரணமாக நடுவரின் தீர்ப்பை மேல்முறையிடு செய்யும் டிஆர்எஸ் முறையில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கலாம். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்சில் அணிக்கு கூடுதலாக ஒரு டிஆர்எஸ் வாய்ப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here