தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல பிரபலங்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலை உயிரிழந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் பாண்டு:
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் திரை உலகினர், அரசியல் பிரபலங்கள் போன்றவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான பாண்டு இன்று காலை உயிரிழந்துள்ளார். 74 வயதான பாண்டு இதுவரை சின்ன தம்பி, இதய வாசல், குட்லக், கில்லி உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றவர். இவர் தனது சிரிப்பாலும் தனது தனி திறமையான நடிப்பை கொண்டு மக்கள் அனைவரையும் கவர்ந்தவர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் பாண்டு மற்றும் அவரது மனைவிக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாண்டுவின் உயிர் உடலில் இருந்து பிரிந்தது. தற்போது இவரது மறைவிற்கு திரை உலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
Super actors rip