கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை – இன்று மாலை தொடக்கம்!!

0

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அதனை தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என முதல்வராக பதவியேற்றவுடன் மாலை 5 மணிக்கு கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல் நடவடிக்கை:

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பரவலை தடுக்கவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் பணியிலும் மிக தீவிரமாக செயல்பட்டு கொண்டுள்ளார். முதல்வராக பதவியேற்றவுடன் மாலை 5 மணிக்கு கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போல் இன்னும் தீவிரமான களப்பணியில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!


கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளுடன் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டமானது தலைமை செயலகத்தில் காணொளி மூலம் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மேலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளின் ஆலோசனையின்படி பல கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here