இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிசன் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி கள்ள சந்தையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி விற்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி:
இந்தியாவில் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் ஆக்சிசன் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பலர் உயிரிழந்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதனால் நாட்டு மக்கள் வேதனை அடைந்தது வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக தற்போது நாட்டில் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் அனைவருக்கும் ஆக்சிசன் மருந்துகள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விஐய் படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!!
Delhi | Four people from a restaurant-cum-bar in Lodhi Colony have been arrested in connection with black marketing of oxygen concentrators. Police recovered 419 oxygen concentrators, which were sold for over Rs 70,000. Case has been registered: DCP South pic.twitter.com/iWYgoxx3AM
— ANI (@ANI) May 6, 2021
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி டெல்லியில் கள்ள சந்தையில் ஆக்சிசன் செறிவூட்டும் கருவி விற்கப்படுவதாக தகவல் வெளிவந்தது. தகவல் அறிந்து டெல்லியில் உள்ள லோதி காலனிக்கு சென்ற போலீசார் கள்ள சந்தையில் கருவியை விற்ற 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 419 ஆக்சிசன் செறிவூட்டும் கருவி கைப்பற்றியுள்ளனர். அந்த கருவி ஒன்று ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.