இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 4,12,262 பேர் பாதிப்பு!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இதுவரை கண்டிராத வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 4,12,262 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் மக்களிடையே மிக அதிகமான அளவில் இருந்து வருகிறது. மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை குறித்தும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,10,77,410 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் 3,980 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,30,168 ஆக அதிகரித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘மக்களை காக்க தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட வேண்டும்’ – ஸ்டாலின் கோரிக்கை!!

அதேபோல் நேற்று ஒரே நாளில் நாட்டில் தொற்றில் இருந்து 3,29,113 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக தற்போது கொரோனா தொற்றில் இருந்து நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,72,80,844 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 82.03% ஆகவும் உயிரிழப்பவர்களின் விகிதம் 1.09% ஆகவும் உள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றிற்கு உள்ளாகி மருத்துவமனையில் 35,66,398 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here