கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமல்ஹாசன் – வைரலாகும் புகைப்படம்!!

0

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்

இந்தியா முழுவதும் கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. முன்னதாக கொரோனா முன்களபணியாளர்கள் 8 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சாதாரண பக்கவிளைவுகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தகவலால் பொதுமக்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்திய பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் பயமில்லாமல் தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி – அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது!!

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தன் மேல் மட்டுமல்ல பிறர் மீதும் அக்கறை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். உடல் நோய்க்கான தடுப்பூசியை உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள். ஊழல் நோய்க்கான தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகுங்கள்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here