நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த பத்து தல திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் கௌதம் கார்த்திக்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்து தல, ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கிரிமினல் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படமும் இவருக்கு வெற்றியை தேடி தரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் பேசியதாவது, பொதுவாக எனக்கு அடுத்த நபரிடம் பணம் வாங்குவது பிடிக்காது.
கொழுகொழுப்பா இருக்கு மேனி., அதுல மினுமினுப்ப ஏத்தி இளசுகள கிறங்கடிக்கிறிங்களே கிரண்!!
அதனால் தான் என்னோட கல்யாணத்தை கூட என் அப்பா பணத்தில் செய்யாமல் என்னோட பணத்தில் செய்தேன். ஏன் சொல்லப்போனால் கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடமாக வெளியே வராமல் இருந்த போது, என்னுடைய கார், பைக்கை விற்று தான் சமாளித்தேன். அந்த சமயத்தில் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தது மஞ்சிமா தான். நான் எந்த ஒரு Decision எடுத்தாலும் அவரிடம் கலந்தாலோசித்து விட்டு தான் எடுப்பேன் என கூறியிருக்கிறார்.