தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இருந்தாலும் இதுவரை இதற்கான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்து உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது “தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு…, கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது போல் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள், இம்மாதம் ஓய்வு பெறும் ஆசிரியர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 15,000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு இம்மாதமே முடிவுகளை அறிவிக்க வேண்டும்.” என கேட்டு கொண்டுள்ளனர்.