தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு…, கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

0
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு..., கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு..., கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா (CBSE) பள்ளிகளும் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பள்ளிகளிலும், ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதி ஆண்டு தேர்வில், ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமே துணை தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை, துணை தேர்வு எழுத அனுமதிப்பது இல்லை. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என, பல்வேறு மாணவர்கள் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 4ல் டாஸ்மாக் கடைகள் அடைப்பு- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

சமீபத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கேந்திரிய வித்யாலயா தரப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை, துணை தேர்வு எழுத அனுமதி இல்லை என்பது தங்களின் விதி என்று கூறியுள்ளனர். எனவே, இரு தரப்பை விசாரித்த நீதிபதி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 11 ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here