நடிகர் தனுஷ் என் மகன் தான் என்று மதுரை மேலூரை சேர்ந்த தம்பதியர்கள் தொடுத்த வழக்கில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தனுஷ் வழக்கு:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வாத்தி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். இப்படி பிஸியாக நடித்து வரும் நடிகர் தனுஷை தன்னுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமின்றி மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர். மேலும் நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதால் மாதாந்திரம் ரூபாய் 60,000 எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத நடிகர் தனுஷ் இந்த வழக்கு ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்தார். தனுஷ் வழக்கை எடுத்துக் கொண்ட நீதிமன்றம் பல தடவை விசாரணை நடத்தியது.
நல்லா கொழு கொழுன்னு நெய் குழந்தை மாதிரி இருக்கீங்களே கிரண்.., பிரஷரில் துடித்த இளசுகள்!!
இந்நிலையில் இந்த வாழ்க்கை குறித்து முக்கிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நீதித்துறை நடுவரின் தீர்ப்பை ஏற்க முடியாத மேலூர் தம்பதியர்கள் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த தம்பதியர்கள் தொடர்ந்து தனுஷ் என் மகன் தான் என்று வாதாடி வருவது குறிப்பிடத்தக்கது.