இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான கடைசி போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து, நியூசிலாந்து அணி தொடரை வென்றது.
IND vs NZ:
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடியது. இந்த தொடரின், முதல் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து, 2வது போட்டி மழை காரணமாக கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து, தொடரின் கடைசி போட்டி இன்று ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய, இந்திய அணி 47.3 ஓவரிலேயே 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 49, வாஷிங்டன் சுந்தர் 54, தவான் 28 ரன்கள் எடுத்திருந்தனர்.
ரோஹித்துடன் இணைந்த தவான்…, இதெல்லாம் ஒரு சாதனையா??
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்திருந்தனர். இதில், ஃபின் ஆலன் 54 பந்தில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், 18 ஓவரில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்திருந்தனர். இந்நிலையில், மழை குறுக்கிட்டதால், போட்டியானது முடிவில்லாமல் ரத்தானது. இதனால், நியூசிலாந்து அணி 1-0 என்ற வெற்றி கணக்கில் தொடரை வென்றது.