கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நம்மை நமே தனிமை படுத்திக்கொள்ளவது அவசியமானது. இந்த 14 நாட்கள் தனிமை ஏன்? அது என்ன குறிப்பிட்ட 14 நாட்கள் மட்டும்? 14 நாட்களில் எல்லாம் சரியாகிவிடுமா? என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் – ஆய்வில் தகவல்..!
தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நீர்துளிகளால் இந்த கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்கிறது சமீபத்திய ஒரு அமெரிக்க ஆய்வு.. இந்த வைரஸ் 3 மணி நேரம் உயிருடன் வாழ கூடியவை. இந்த வைரஸ் மனித முடியை விட 30 மடங்கு சிறியதாம். காற்றில் பல மணி நேரம் உயிர் வாழக் கூடியவை என்பதால் தான் இவ்வளவு பயம் நம்மை சூழ்ந்துள்ளது. அட்டை பொருள், பிளாஸ்டிக், ஸ்டீல் என பொருட்களில் கூட 2, 3 நாட்களுக்கு உயிருடன் இந்த வைரஸ் இருக்குமாம்.
அதற்காகத்தான் எந்த பொருளையும் தொடக்கூடாது என்றும், அப்படியே தொட்டாலும் முகத்தில் கையை வைக்க கூடாது என்றும், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
14 நாட்கள் தான்..!
அதிகபட்சமாக இந்த வைரஸ் 14 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். இதன் ஆயுளே அவ்வளவுதான். அதனால் தான் 14 நாட்கள் என்று குறிப்பிட்டு சொல்லி அதற்கான விடுமுறையை அளித்துள்ளனர். அப்படி தனிமைப்படுத்தப்படும்போது அந்த வைரஸ் வேறு ஒருவருக்கும் பரவாமல் தடுக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளனர்.
கவனம் தேவை மக்களே..!
14 நாட்கள் வீட்டிலேயே நம்மை தனிமைப்படுத்தி கொண்டால் மிகப்பெரிய அழிவு, துர்நிலையில் இருந்து இந்தியா தப்பிக்கலாம். இந்த 14 நாட்களை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளாவிட்டால், சீனா போலவோ, இத்தாலி போலவே, ஈரானை போலவோ நாளை இந்தியாவும் உருமாறலாம், உருக்குலையலாம் விழிப்புணர்வு தேவை மக்களே.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |