நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டுமே கொரோனவால் நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 2,00,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனவால் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டு நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 93,528 பேர் குணமடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இதன்மூலம் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,24,29,564 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 14,71,877 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் மருத்துவமனையில் 1,06,173 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவலினால் நாட்டும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.