தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது வீசும் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆயிரக்கணக்கில் பாதிப்பு கண்டறிந்து வந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பாத்தின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 8 ஆயிரத்தை நெருங்கியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமலுக்கு கொண்டு வந்தனர். அந்த கட்டுப்பாடுகளில், திரையரங்கில் 50%இருக்கைகள், கோவில் போன்ற மதசார்ந்த கூட்டங்கள், திருவிழாவிற்கு தடை, ஹோட்டல்களில் நேரங்கள் குறைப்பு, பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை போன்ற பல தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளது.
ஸ்கூலில் மீண்டும் இனியாவிடம் பேச முயற்சிக்கும் சந்தோஷ் – இனியா எடுக்க போகும் முடிவு என்ன??
இருந்தும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதை கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் நாளை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார். இதில் தமிழகத்தில் மேலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.