தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரிகளின் அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அரியர் தேர்வு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நாளடைவில் இதில் ஓர் சர்ச்சை கிளம்பியது. அது என்னவென்றால் அரியர் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஐஸ்வர்யாவின் கல்யாண பத்திரிக்கையை எரிக்கும் சேது – நடக்கப்போகும் விபரீதம்?? பல ட்விஸ்டுகளுடன் ‘இதயத்தை திருடாதே’!!

தற்போது இதுகுறித்து மேலும் ஓர் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடுத்த 8 வாரத்திற்குள் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here