வருண் மோசமான நிலையில் இருக்கும்போது வீட்டிற்கு வரும் சக்தி – விறுவிறுப்பாகும் ‘மௌனராகம் 2’ சீரியல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணுக்காக ஸ்ருதி நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி வைக்கிறார். ஆனால் வீட்டில் வருணை தான் ஸ்ருதி விரும்புகிறார் என்று நினைத்து கொள்கிறார்.

மௌனராகம்

மௌனராகம் சீரியலில் தருண் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். சக்திக்கு தொடர்ந்து தருண் உதவி செய்வதை பார்த்து மல்லிகாவுக்கு சந்தேகமாகிறது. தருணிடம் இதனை நேரடியாகவே சொல்லி விடுகிறார். ஆனால் தருண் எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டி விட்டு சக்தியை கண்டிப்பாக திருமணம் செய்து நன்றாக பார்த்து கொள்வேன். அதனை உங்களுக்கு புரியவும் வைப்பேன் என்று நினைத்து கொள்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி இருக்க ஸ்ருதி தருணை காதலித்து வருகிறார். ஆனால் தருனோ சக்தியை விரும்புகிறார். மேலும் ஒரு குழப்பம் என்னவென்றால் ஸ்ருதி வீட்டில் அனைவரும் வருணை தான் விரும்புகிறார் என்று நினைத்து கொள்கின்றனர். தருணுக்காக ஸ்ருதி பல கிஃப்ட் எல்லாம் வாங்கி வைக்கிறார்.

இதனை பார்த்த கார்த்திக் யாருக்கென்று கேட்க சொல்லாமல் மேலே சென்று விடுகிறார். இதனை கதம்பரியிடம் கேட்கிறார். தருணுக்காக என்று சொல்ல கார்த்திக்கு குழப்பமாகிறது. காதம்பரி என்ன என்று கேட்க வருணிடம் இருக்கும் மாற்றத்தை பற்றி சொல்கிறார்.

இனியாவை சந்தோஷ் வீட்டில் பார்க்கும் ஜெனியின் அப்பா – கொந்தளிக்கும் பாக்கியாவின் குடும்பம்!!

அந்த மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது என்று சமாதானம் செய்கிறார். அடுத்ததாக மல்லிகா வீட்டில் பால் காய்ச்ச அதனை தருணுக்கு கொடுக்க எடுத்து செல்கிறார். அப்பொழுது அங்கு வருண் அடுப்படியில் நெருப்பை பார்த்து பயந்து ஓடுகிறார். இதனால் சக்தி கொண்டு வந்த பால் அனைத்தும் கொட்டி விடுகிறது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இதனை சமாளிக்கின்றனர்.

சக்தி தருணிடம் இதற்கு மன்னிப்பு கேட்கிறார். அடுத்ததாக தருண் வருணிடம் சென்று பேசுகிறார். அப்பொழுது தான் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்கிறார். மேலும் எப்பிடியோ உனக்கு புடுச்சி பெண்ணை இங்கேயே கூட்டிட்டு வந்துட்ட என்று வருண் கலாய்க்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here