நடிகர் விஷால் நடித்து திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. இப்பட இயக்குனருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இப்படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
‘சக்ரா’ திரைப்படம் வெளியிட தடை:
ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’. இப்படம் திரில்லர் கலந்த ஆக்சன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பரவலால் மீண்டும் பொதுமுடக்கமா?? அச்சத்தில் மக்கள்!!
இந்நிலையில் ‘சக்ரா’ படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவரிடம் ஒப்பந்தம் செய்துள்ள கதையை இயக்குனர் ஆனந்தன் படமாக எடுத்துள்ளதாக கூறி நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தன் மீது புகார் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, படம் வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மனுவுக்கு பதிலளிக்கும் படி விஷால் மற்றும் ஆனந்தனுக்கு நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.