தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். இவரின் படம் எப்பொழுது வெளியாகும் ரசிகர்கள் தவம் கிடப்பர் என்றே சொல்லலாம். இப்பொழுது லாக்டவுன் காரணமாக நிலுவையில் உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வெளியிடுக்காக பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளது.
மாஸ்டர் திரைப்படம்
கடந்த மார்ச் மாதத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அடுத்து படம் ஜூன் மாதத்தில் ரிலீஸாக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் திரையரங்குகள் யாவும் மூடப்பட்டன. இதனால் மாஸ்டர் திரைப்படமும் நிலுவையில் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த படத்தில் வெளியான குட்டி பாடல் தற்போது வரை மக்களுக்கு விருப்பமான பாடலாக உள்ளது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக கூட மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என்று கூறியவுடன் தான் ரசிகர்களுக்கு நிம்மதியாகவே இருந்தது.
அதன் பின் மாஸ்டர் திரைப்படத்தை சென்சார் போர்டுக்கு செர்டிபிகேட் காக அனுப்பி வைத்தனர். இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அனைவரும் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதுவே மக்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது. எப்படியும் ஜனவரியில் படத்தை வெளியிடுவதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்தின் கதை லீக் ஆகி வருகிறது.
அதாவது இந்த படத்தில் விஜய் ஒரு ஆசிரியராக இருக்கிறாராம். மிகவும் குடுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள விஜயை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு மாற்றுகின்றனர். அங்கு விஜய் சேதுபதி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள குழந்தைகளை வைத்து தவறான சில வேலைகளை செய்கிறார். இதனால் விஜயும், விஜய் சேதுபதியும் மோதுகின்றனர். எப்படி அந்த குழந்தைகளை விஜய் காப்பாற்றுகிறார் என்பதே கதை. இந்த கதை சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளது.