பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி 20 போட்டி இன்று நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 173 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் vs நியூஸிலாந்து:
நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் மற்றும் செய்பிரட் களமிறங்கினர். ஆனால் இருவரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 1 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை இழந்து அனைவரையும் ஏமாற்றினார். அதன் பின் களம் இறங்கிய கான்வே மற்றும் பிளிப்ஸ் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
அதன் பின் கான்வே 63 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார். பிளிப்ப்சும் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில் நியூஸிலாந்து அணி 173 ரன்கள் குவித்து 7 விக்கெட்களை இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அஷ்ரப் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்தார்.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!!
அதன் பின் பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரிஸ்வாட் மற்றும் ஹைடேல் அலி களமிறங்கினர். அலி 11 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தார். அதன் பின் ரிஸ்வாட் உடன் ஹபீஸ் ஜோடி சிறப்பாக செயல்பட்டு எதிரணி பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடி கைது!!
ரிஸ்வாட் 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஷரஃரஸ் கான் 0 ஏமாற்றினார். அஷ்ரப் 2 பெவிலியன் திரும்பினார். முடிவில் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. நியூசிலாந்து அணி சார்பில் ஸ்காட் மற்றும் சௌதீ தலா 2 விக்கெட்களை எடுத்துள்ளார்கள்.