கொரோனா காரணமாக மக்கள் கூடும் இடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா மும்பை கிளப்பில் இரவுநேர பார்ட்டியில் கலந்து கொண்டதற்காக போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ஓய்விற்கு பின்னர் தொடர்ந்து கிரிக்கெட் சார்ந்த சில பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் காஷ்மீரில் இருக்கும் பலருக்கும் கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தும் வருகிறார். அடுத்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் கலந்து கொள்ள உள்ள ரெய்னா அதற்கு தயாராகி வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் மும்பையில் தங்கியுள்ள ரெய்னா அங்குள்ள ஒரு கிளப் மீட்டிங் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவரது நண்பர்கள் சிலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா விதிகளை மீறி கிளப்பில் கூட்டமாக கூடியதாலும், இரவு நீண்ட நேரம் இருந்ததாலும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் – பிசிசிஐ ட்விஸ்ட், ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
சட்டப்பிரிவு 188,269, 34 க்கு கீழ் அவரை கைது செய்துளளனர். மேலும் அவருடன் சேர்த்து 34 பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் சில மணி நேரங்களுக்குக்கு பின் சுரேஷ் ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.