Sunday, May 19, 2024

அதிரடியாக உயர்ந்துள்ள தங்க விலை – கலக்கத்தில் மக்கள்!!

Must Read

கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றம் கண்டு வருவதை அடுத்து இன்று மீண்டும் அதிரடியாக தங்க விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல்:

இந்திய மக்களை பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளிக்கு எப்போதுமே அதிகமான முக்கியத்துவம் அளிப்பர். பெண்கள் தங்க ஆபரணங்கள் வாங்குவதில் அதிகமான ஆர்வம் காட்டுவர். இதனால் தங்கத்திற்கு நம் நாட்டு மக்களிடையே தனி மவுஸ் உண்டு. வெளிநாடுகளில் முதலீடாக மட்டுமே பார்க்கப்படும் தங்கம் நம் நாட்டில் மட்டுமே ஆபரண பொருளாக பார்க்கப்படுகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க கொரோனா பரவல் காரணமாக அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் தங்களது எதிர்கால நலன் கருதி பாதுகாப்பான முதலீட்டான தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ததால் விலை நிலவரம் வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்க விலை அதிரடியாக உயர்ந்து தான் வந்தது. அதுவும் 200 ரூபாய்க்கு குறையாமல் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. இன்றும் அதே போல் தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் தங்கம் 38,712 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 29 ரூபாய் அதிகரித்து 4,839 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு கிராம் 1.50 உயர்ந்து 69 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 69,000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்க உள்ள நிலையில் இப்படியாக தங்க விலை உயர்ந்துள்ளது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -