விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் முல்லை, கதிர் எப்பொழுது சேருவார்கள் என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இதுவரையிலும் மக்கள் காத்திருந்திருந்த காட்சி கூடிய விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மக்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே நலல வரவேற்பை பெற்றது. ஏனெனில் இதுவரையிலும் இல்லாத விதமாக ஒரு கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதையாக உள்ளது. இதுவரையிலும் வெள்ளித்திரையில் மட்டுமே அண்ணன், தம்பி கதைகளை பார்த்துள்ளோம். அதனாலேயே மக்களுக்கு பிடித்து போனது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஜீவாவின் திருமணத்தில் நடந்த விஷயங்களால் முல்லை கதிரை கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அண்ணன், அண்ணி சொன்ன ஒரு வார்த்தைக்காக முல்லையை திருமணம் செய்து கொண்டார் கதிர். ஆரம்பத்தில் இவர்கள் முட்டிக்கொண்டாலும் நாளடைவில் இவர்கள் காதலும் மலர்ந்தது.
சரி அடுத்தது இவர்களின் காதல் கதை தான் என்று இருந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் தொடர்ந்து பல பிரச்சனைகள் தான் ஓடிக்கொண்டிருந்தது. சரி இவர்களுக்கு சென்னை போகும் போதாவது ரொமான்ஸ் சீன் வைப்பார்கள் என்று பார்த்தால் அதிலும் பல தடங்கல்கள்.
இப்பொழுது எல்லா பிரச்சனையும் முடிந்து ஓரளவிற்கு அனைத்தும் சரியானது என்று பார்த்தால் ரதி உருவத்தில் பிரச்சனை வந்தது. நேற்றைய எபிசோடில் முல்லை நடந்த அனைத்தையும் தனத்திடம் கூற அவர் மூர்த்தியிடம் கூறுகிறார். இதனால் மூர்த்தியும் அதிர்ச்சியடைகிறார்.
இப்பொழுது தனத்திற்கு உண்மைகள் தெரிந்து விட்டதால் இதற்கு நல்ல முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கதிர், முல்லை ரொமான்ஸ் சீன் கூடிய விரைவில் வரவுள்ளது தெரிகிறது. மேலும் இன்றைய எபிசோடில் தரமான காட்சியும் வெளியாகியுள்ளது. அதாங்க, முல்லைக்கு முதல் தடவை கதிர் முத்தம் கொடுத்துட்டாரு. இனி அடுத்தடுத்து பல சீனுக்காக மக்கள் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர்.