வருமான வரித்துறைச் செயலாளரான பீலா ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அவ்வறிக்கையில் 30 லட்சத்துக்கு மேலான அனைத்து சொத்துக்களும் பதிவு செய்யும் போது வருமான வரித்துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறி உள்ளார்.
இன்றைய நிலவரப்படி, பத்திரப்பதிவு படிவம் 60 மற்றும் 61 – ஏ இணையத்தளத்தில் வெளிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன. பின்பு அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
கணக்கு தாக்கல்
மேலும் வருமானவரி சட்டம் 1962 கீழ் படி , 10 லட்சத்திற்கு மேலான அனைத்தும் சொத்து பத்திரப்பதிவுடன் பான் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறையினர் பகிர்ந்துகொள்ளப்டும் நிலையில் சொத்துக்கள் யார் பெயரில் பதியப்பட்டது என்பதை வருமானவரி கணக்கு தாக்கலின் போது தெரிந்துக் கொள்ளலாம் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவற்றுடன் கணக்கு தாக்கலின் போது மொத்த மதிப்பை குறிப்பிடாமல் இருந்தால், சொத்து பதிவு செய்யப்பட்டவருக்கும் மற்றும் விற்பனை செய்த நபருக்கும் நோட்டீஸ் விடப்படும் என்று தமிழக அரசு எச்சரித்து உள்ளது.