பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் போகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது பிரசவத்திற்கு அட்மிட் ஆகி உள்ள கண்ணம்மாவிற்கு, வெண்பா விஷ ஊசி போட முயற்சி செய்துள்ளார். மயக்கத்தில் இருக்கும் கண்ணம்மாவால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இதனால் பாரதி பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுமா?? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விறுவிறுப்பான திருப்பம்:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கும் ஒரு தொடர் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான், பல திருப்பங்களுடன் போகும் இந்த தொடர் தற்போது அதிரடியாக மேலும் சில ட்விஸ்ட்களுடன் வரப் போகின்றது. நேற்று சௌந்தர்யா தனது மருத்துவமனையிலேயே கண்ணம்மாவை பிரசவத்திற்காக சேர்க்கிறார். ஒரு பக்கம் கண்ணம்மா பிரசவ வலியால் துடிக்கிறார். சௌந்தர்யா பதட்டத்தில் இருப்பதால் அகிலன் அவரை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்கின்றார். முதலில் சௌந்தர்யா கோவிலுக்கு வர மறுக்கின்றார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால், அகிலனின் தொடர் வற்புறுத்தலால் அவர் கோவிலுக்கு செல்கிறார். அவர் கோவிலுக்கு சென்றதும் இங்கே பிரசவ அறையில் வெண்பா கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்க்க செல்கிறார். அவருக்கு மயக்க ஊசிக்கு பதிலாக விஷ ஊசி போட முயற்சிக்கிறார். அரை மயக்கத்தில் இருக்கும் கண்ணம்மாவிற்கு இது தெரிந்த்து பதட்டம் அடைத்து வெண்பாவிடம் கெஞ்சுகிறார். தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்றும் தான் வாழ வேண்டும் என்று சொல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், வெண்பா அதனை காதில் வாங்காமல் விஷ ஊசி போட போகிறார். அப்போது அதிரடி திருப்பமாக துர்கா, வெண்பாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார். துர்காவிடம் வெண்பா இது சத்து ஊசி தான் என்று கூறுகிறார்.
இதனை கேட்ட துர்கா அப்போது முதலில் ‘நீ போட்டு கொள்’ என்று அவரை வற்புறுத்தி பிரசவ அறையில் இருந்து வெண்பாவை இழுத்துச் செல்கிறார். ஆனால், கண்ணம்மாவால் ஒரு கட்டத்திற்கு மேல் வலியினை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பாரதி செய்து கொடுக்கும் சத்தியம்:
இதனை அறிந்த அங்கிருந்த செவிலியர் ஒருவர் பாரதியிடம் சென்று ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடிக்கிறார் என்று கூறுகிறார். உடனடியாக அறைக்கு சென்று பார்க்கும் பாரதி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.
பின் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்க்க மாட்டேன் என்று செவிலியரிடன் சொல்லி விட்டு வந்து விடுகிறார். அறையை விட்டு வெளியே வந்ததும் பாரதிக்கு தான் மருத்துவ சான்றிதழ் பெற்றவுடன் தன் அம்மாவிற்கு செய்து கொடுக்கும் சத்தியம் ஞாபகத்திற்கு வருகின்றது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பாரதி தன் அம்மாவிடம் தனது சுய விருப்பத்திற்கு முக்கியத்துவம் தராமல் வலியால் துடிக்கும் உயிரினை காப்பாற்றுவேன் என்று உறுதி கூறுகிறார். இப்படியான நிலையில் கண்ணம்மாவிற்கு பனிக்குடம் உடைந்து விடுகின்றது. கண்ணம்மாவிற்கு பாரதி பிரசவம் பார்ப்பாரா?? இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.