சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவுகளில் விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கனை எந்த முறையில் சமைத்தாலும் அதன் ருசி தனியாக தெரியும். அதனால் தான் சிக்கனை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இப்பொழுது ஈஸியான முறையில் பஞ்சாபி சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 1/2 கி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- இஞ்சி – சிறிது
- பூண்டு – 4 பல்
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிது
- தயிர் – 1 கப்
- பச்சைமிளகாய் – 3
- தக்காளி – 2
- பெரிய வெங்காயம் – 2
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக கழுவி பின் அதில் உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் 4 நிமிடங்கள் வதக்கவும்.
‘அசத்தலான இறால் தொக்கு ரெசிபி’ – இதோ உங்களுக்காக!!
பின்பு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதன்பின் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பச்சைமிளகாய் சேர்த்து வதங்கியதும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
அதன்பின் அரைத்த தக்காளியை உப்பு சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் சேர்த்து கிளறவும். பிறகு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் பஞ்சாபி சிக்கன் தயார்.