Monday, May 27, 2024

உங்க வாழ்க்கையில் இந்த விஷயத்தை மட்டும் பண்ணிடாதீங்க – சாப்பாடுக்கு கூட கஷ்டம் வருமாம்!!

Must Read

நம் வாழ்வில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில காரியங்களை செய்து விடுகிறோம். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை. சில விஷயங்களை செய்வதால் நாம் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்படுமாம்.

அன்னதோஷம்

ஒரு சில தவறுகளை செய்வதன் மூலம் மனநிம்மதியற்ற வாழ்கை தான் நமக்கு கிடைக்குமாம். கோடி கோடியாக கொட்டி கிடந்தாலும் நிம்மதியாக ஒரு வாய் சாப்பிட முடியாத நிலை தான் ஏற்படுமாம். சிலருக்கு அனைத்து வசதிகளும் இருந்தும் நோயின் காரணமாக சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. சிலருக்கு கஞ்சி மட்டுமே குடித்து வாழும் நிலையும் ஏற்படுகிறது.

eating
eating

பலருக்கு உடல் ஆரோக்கியம் இருந்தும் சமைத்து தர ஆட்கள் இருந்தும் சுவையாக சமைத்து சாப்பிட போதுமான வசதி இருக்காது. இதை தான் சாஸ்திரத்தில் அன்னதோஷம் என்று கூறுவர். இந்த அன்னதோஷம் வருவதற்கு காரணம் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை சாப்பாடு போடாமல் அவமதிப்பது, சாப்பிட உட்கார்ந்தவர்களை சாப்பிட விடாமல் கண்டபடி பேசி அனுப்புவது, வீட்டில் உள்ள கர்பிணி பெண்களை பசியில் விட்டுவிட்டு சாப்பிடுவது, பசியில் உள்ள குழந்தைகளுக்கு முன் அவர்களுக்கு தராமல் சாப்பிடுவதும், சாப்பாடை அதிகமாக கொட்டுவது, நம்மை தேடி வரும் ஏழை, எளியவர்களுக்கு சாப்பாடு இருந்தும் தராமல் இருப்பது போன்ற செயல்களால் அன்ன தோஷம் ஏற்படுகிறது.

பரிகாரம்

Annapoorani-1
Annapoorani-1

அன்னதோஷம் உள்ளவர்கள் வீட்டில் அன்னபூரணி படத்தை வைத்து பால் மற்றும் அன்னம் வைத்து வழிபட்டு வரலாம். அனாதை குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். சாப்பாடை வீணாக்காமல் இருங்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -